Monday 5 October 2009

நாம் ... அவர்கள்...

உண்டு களித்து
நலத்தை செம்மையாக்க
நித்திரை தேவியை
சில நேரம் கட்டியணைக்கும்
நாம்..

பசியும் தாகமும்
தீர வழியில்லாத நிலையிலும்
வெயிலையும் குளிரையும் பொருட்படுத்தாது
நித்திரை தேவியை
பல நேரம் கட்டியணைக்கும்
அவர்கள்..

முயற்சிக்கும் வெறி மட்டுமே
நம்மையும் அவர்களையும்
வேறுபடுத்துகிறது..
நண்பா ..
நீயும் வெறியோடு
முயற்சி செய்ய முயற்சி செய்...


நன்றி,
நாணல்

6 comments:

ஆயில்யன் said...

//முயற்சிக்கும் வெறி மட்டுமே
நம்மையும் அவர்களையும்
வேறுபடுத்துகிறது..//

ம்ம் கடின உழைப்பு என்பதே ஒரு வித வெறிதான்!

நல்லா இருக்கு !

ரவி said...

நானும் பின்னூட்டம் போட முயற்சி செய்யறேன்...!!!

வெற்றி வெற்றி !!!!!!!

நட்புடன் ஜமால் said...

தூங்காதே தம்பி தூங்காதே ...

தேவன் மாயம் said...

முயற்சிக்கும் வெறி மட்டுமே
நம்மையும் அவர்களையும்
வேறுபடுத்துகிறது..
நண்பா ..
நீயும் வெறியோடு
முயற்சி செய்ய முயற்சி செய்...//

பின்னூட்டம், ஒட்டும் போட்டாச்சு! விருது வாங்க என் தளம் வருக!

கவிக்கிழவன் said...

நானும் முயற்சி செய்கிறேன்

ப்ரியமுடன் வசந்த் said...

//முயற்சிக்கும் வெறி மட்டுமே
நம்மையும் அவர்களையும்
வேறுபடுத்துகிறது..//

கண்டிப்பா

உத்வேகம் கொடுக்கும் வரிகள்