Showing posts with label கண்ணாடி. Show all posts
Showing posts with label கண்ணாடி. Show all posts

Tuesday, 15 May 2012

தீர்ப்பின் வழக்கு

‘இன்று உனக்கு விடுதலை’யென
குரல் வந்த வழி
ந‌ன்றி சொல்லிப் புறப்பட்டேன்,
வழி நெடுக்க
விசித்திர நிகழ்வுகளைச் சும‌ந்த‌ப‌டி!


உச்ச‌க்க‌ட்ட‌மாய்
என‌க்கெதிரே ஒரு பிம்பம்;
என் கைக‌ள் செய்வ‌தை
நேரெதிர் திசையில்
செய்து கொண்டு,
நான் உச்ச‌ரிக்கும் வார்த்தைகளுக்கேற்ப‌
அத‌ன் இதழ்களைக்
குவித்துக் கொண்டும்;


என்ன‌ருகில் இருப்ப‌வ‌ரைப் போன்றே
அத‌ன‌ருகிலும் ஒரு பிம்ப‌ம்,
இவ‌ர் செய்வ‌தையே செய்த‌ப‌டி;
இவ‌ருக்கில்லா குழ‌ப்ப‌ம்
என‌க்கு ம‌‌ட்டுமேனோ
என யோசிக்கையில்
பிம்ப‌த்தையும் அழைத்து சென்றுவிட்டார்
என்னருகில் இருப்ப‌வ‌ர்;


மற்றுமொரு பிம்ப‌த்தின் துணையோட‌ வ‌ந்த‌
என்‌ பால்ய‌ சினேகித‌ன்,
‘எப்போ நீ வெளியில வ‌ந்தே?’
என்று இருமுறை வினவியப்பின்
நீண்ட நேர யோசனையின் விளைவாய்
நினைவுக்கு வ‌ந்த‌தென‌க்கு;


“வ‌ழ‌க்கொன்றின் தீர்ப்பாய்
க‌ண்ணாடியில்லா உல‌கிற்கு
மாற்ற‌ம் செய்ய‌ப்பட்டுள்ளேன்
ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்னெனவும்,
இன்று தான் அங்கிருந்து
விடுத‌லையானேன் என‌வும்”


நன்றி,
நாணல்