Sunday 31 May 2009

என் விடியல்...

எங்கோ ஓடி
எங்கெங்கே தேடினாலும்
உந்தன் முகம் தானம்மா
என் விடியல்...

நீ மீண்டும் வருவாய்
என்று தானே
என் இரவைக் கழிக்கின்றேன்...

மேகம் மறைத்து
நீ மறைந்தாலும்
உன் கண்ணீரால் தானே
என் ஜீவனை வளர்க்கின்றேன்...

உலகே இன்று
எனக்கு சொந்தம்
உன்னால்...
உன் சொந்தம்?

என்னை நீ
ஜீவித்தது போதுமம்மா
உன் மூச்சாக
நான் இருப்பேனோ தெரியாது
உன் வாழ்நாள் தோறும்
நான் இருப்பேன்!

தாயே
உன்னால் நான் பெற்ற
வெற்றியின் மீது ஆணை !


- நன்றி!
நாணல்