நண்பர்களே,
2011 இன் இந்த முதல் பதிவு, மறக்கமுடியாத ஒன்றாக அமைந்துள்ளது.
முதல் கற்றலின்
எழுத்துக்களை
வீட்டுச்சுவரில் சித்திரங்களாய்
வடித்து பத்திரப்படுத்தும்
குழந்தையைப் போல்
எனது கிறுக்கல்கள்
புத்தக வடிவாய்..

சென்னை மணிமேகலைப் பிரசுரம் மூலம் ‘இயந்திரமாய் மாறியது போதும்’ என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளது.
இன்று முதல் நடக்கவிருக்கும், சென்னை புத்தக கண்காட்சியில் மணிமேகலைப் பிரசுரத்தில்(Stall No: F30) கிடைக்கும். புத்தகமாய் வருமளவிற்கு என் கவிதைகள் வளர்ந்துள்ளதா தெரியாது..சிறு பிள்ளை முயற்சியென இதில் இறங்கினேன். படித்து நிறை குறை கூறுங்கள், கற்றுக்கொள்கிறேன்.
நன்றி,
நாணல்