Thursday 31 December 2009

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....


பகலில் தெரியும்
நிலவைப் போல்
இப்பூவுலகில் எல்லாமும்
உன் கண் முன்னே
தான் கொட்டியிருக்கு...
பார்க்கும் உன் பார்வையையும்
தேடும் உன் இடத்தையும்
கொஞ்சம் விடாமுயற்சியோடு
திருத்திக் கொண்டேயிரு...
உன் தேடலுக்கு
விடை பிறக்கும்....


அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...


நன்றி,
நாணல்


Tuesday 29 December 2009

என் தாயவள் - உரையாடல் கவிதைப் போட்டிக்காக

என்னைத் தாலாட்டி
உறங்க வையடி நீ,
என்னைத் தாயாக்காதே,
தாலாட்டு பாடிட
தெரியாதம்மா எனக்கு!

பனிச் சிற்பம்
போல் நீ
இருந்தால் போதும்,
நீ உருக வேண்டாம்,
உனக்காக நான்
உருகுவேனடி !

என்னை உருவாக்கியவள்
தாயாயின்,
எனக்கு உருதந்தவகையில்
நீயும் எனக்கு
தாய்தானம்மா !

என்னைக் காத்தவளே..
எனக்காகக் காத்திருப்பவளே...
எனை மட்டும் காத்திரு,
எனக்காக மட்டும் காத்திரு !

நேசங் கொண்ட
தோழியாய்
பாசங் கொண்ட
காதலியாய்
உனை இழக்க
நான் துணிந்தாலும்,
தாலாட்டும் தாயாய்
எங்கனம் இழப்பேன் !!

நன்றி,
நாணல்

Wednesday 2 December 2009

நீ, நான், நாம்....



நீ நான் என
பிரித்தறியா நாட்களில்
நாமாக நமக்களித்த
இன்ப துன்பங்கள்
இன்று
துன்ப இன்பங்களாய்
உருவெடுத்து
நீயும் நானும்
மீண்டும் நாமாகும்
நாளுக்காக தவமிருக்கின்றன...


நன்றி,
நாணல்