Tuesday 16 March 2010

கள்ளன்... யூத்ஃபுல் விகடனில்




இந்த கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளியிடப்பட்டுள்ளது ...

நன்றி யூத்ஃபுல் விகடன்..


http://youthful.vikatan.com/youth/Nyouth/nanalpoem1503010.asp

கள்ளன்...



முன்னிரவின் கள்ளமில்லா
வெள்ளைநிலவின் ஒளியில்
கள்ளச்சிரிப்புடன்
கொள்ளைக்கொண்ட நீ
எந்தன் துயில் நீக்கும்
வேகத்தடையோ…

விழித்தெழுந்துப் பார்க்கையிலே
அமாவாசையின் இருட்டில்
உன் கள்ளச்சிரிப்பு
என் மேல் மையல் கொண்டுள்ளது

தூக்கத்தடைகள் கொண்ட கனவுலகத்தை
மீண்டும் தழுவுகிறேன் அன்பே...
கள்ளன் உன் தரிசனம் வேண்டி..!



நன்றி,
நாணல்

Wednesday 10 March 2010

காதலருவி

பருவத்தின் உச்சியில் பிறந்து
நினைவுகளில் ஆழ்ந்து மூழ்கி
இன்ப துன்பங்களில் உழன்று
வழி நெடுக்க உயிர் கொணர்ந்து
சலசலக்கும் கூ(ஊ)டலோடு இசைபறப்பி
வாழ்க்கைக் கடலின் அமைதியான நடுக்கடலில்
நிலவோடு போட்டிக்கொண்டு
அமைதியாக பயணிக்கிறது நம் காதல்

நன்றி
நாணல்