Saturday 18 December 2010

ரகசிய சினேகிதனே…

‘ஆயிரம் முறை திருடிய
அதிசயத் திருடன் கைது’
செய்தி பார்த்ததும்
பதறித்தான் போனேன்
ஆயிரம் முறை என் இதயத்தை
திருடிய அதிசயத் திருடன்
உனையும் கண்டுகொள்வரோ என

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நீயும் கவிஞனென
தெரிந்ததில் இருந்து
அவசர அவசரமாய்க்
கவிதை உருப் பெறுகின்றது
நம் உரையாடல்கள்
என் கவிதைப் பக்கத்தில்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

தொழில்நுட்பத்தின் புரட்சி
உனை என்றும் என்னருகில்
இருக்கவைத்தாலும்
என் வெட்கங்களையும்
என் மெளனங்களையும்
மொழிபெயர்க்க முடியா கைபேசி
சொல்கிறது தொழில்நுட்பம் இன்னும்
வளர வேண்டுமென


நன்றி,
நாணல்

3 comments:

SaHaYa BaBu said...

third one is very nice

சர்பத் said...

வரிகள் அருமை

நாணல் said...

நன்றி பாபு, சர்பத் :)