Monday 1 August 2011

தோழியின் தோழன்..

கதைகள் பல பேசி
கருத்துக்கள் பல பரிமாறி
நம்பத்தகுந்த உறவானாய் நீ - என்
உயிரின் உறவான தோழன்!

பால் வேற்றுமை தாண்டிய
உறவாயியினும்
நிச்சயிக்கப்பட்ட பிரிவைத் தவிர்க்க
தவியாய் தவித்தும்
தவறவில்லை நம் பிரிவு!

காலங்கள் மாறினாலும்
மனித மனங்கள் விரிந்தாலும்
வாழ்க்கைக் கோட்பாடுகளின்
நாகரிகம் கருதி முளைக்கின்ற
திடீர் மரியாதைகளையும் அவதானிப்புகளையும்
சகஜமாக்கிக் கொள்ள முயற்சிக்கின்றேன்,
நீ என் தோழனானதால்…

நன்றி,
நாண‌ல்

5 comments:

நட்புடன் ஜமால் said...

நாகரிகம் கருதி முளைக்கின்ற
திடீர் மரியாதைகளையும் அவதானிப்புகளையும்

well said ...

நாணல் said...

நன்றி ஜமால் :)

Anonymous said...

Nalla ezhuthureenga , keep writing :)

Anonymous said...

Nalla Ezhuthureenga, Keep Writing :)

நாணல் said...

நன்றிங்க... :)