என்னைத் தாலாட்டி
உறங்க வையடி நீ,
என்னைத் தாயாக்காதே,
தாலாட்டு பாடிட
தெரியாதம்மா எனக்கு!
பனிச் சிற்பம்
போல் நீ
இருந்தால் போதும்,
நீ உருக வேண்டாம்,
உனக்காக நான்
உருகுவேனடி !
என்னை உருவாக்கியவள்
தாயாயின்,
எனக்கு உருதந்தவகையில்
நீயும் எனக்கு
தாய்தானம்மா !
என்னைக் காத்தவளே..
எனக்காகக் காத்திருப்பவளே...
எனை மட்டும் காத்திரு,
எனக்காக மட்டும் காத்திரு !
நேசங் கொண்ட
தோழியாய்
பாசங் கொண்ட
காதலியாய்
உனை இழக்க
நான் துணிந்தாலும்,
தாலாட்டும் தாயாய்
எங்கனம் இழப்பேன் !!
நன்றி,
நாணல்