Wednesday 4 January 2012

ஆழி மழை

நனைக்கின்ற மழையை
மறுக்காது,
ஏற்கின்றேன் மணலாய்!

மறுக்கின்ற அலையைத்
தடுக்காது,
வழிவிடுகின்றேன் கரையாய்!

மழையாய் அலையாய்
மணலாய் கரையாய்
நீயாய் நானாய்
என எல்லாமுமாய்

நித்தமும் நிரம்பிக்கொண்டேயிருக்கிற
நரலை தனில் உன் துளிகளையும்
நிரப்புவது தான் உனக்கிட்ட பணியெனின்
நிரப்பிக்கொள் முடிந்தவரை!

நன்றி,
நாணல்

* நரலை - கடல்