Sunday 30 September 2012

ரகசிய சினேகிதனே…

செல்பேசியின் க்ளிக் சத்ததிற்குப் பின்
உடனே அதன் திரையை
எட்டிப்பார்க்கும் குழந்தையென
உன் கண்களை எட்டிப்பார்க்கின்றேன்,
அதில் பதிந்த நம் காதலை உறுதிசெய்ய!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

என் செவிக்குள் ஒலிக்கும் இசைக்கேற்ப
தூரத்து குழந்தையின் நடனம்
அமைவ‌தாய் உணர்கின்றேன்
உந்தன் பரவசம்
என் காதலாலென‌ உணர்கையில்..


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

புதியதாய் கற்ற‌ எழுத்துக்களை
கண்படும் வார்த்தைகளில் எல்லாம்
துழாவும் ம‌ழ‌லையென‌ உன்னில்
என்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்!


முந்தையப் பதிவுகள் - 12,34, 5, 6, 7

நன்றி,
நாணல்