Sunday 10 January 2010

எனக்காய் நான் வாழ்ந்திட...

கண்ணின் துளி கன்னம் தாண்டும் முன்
கண்ணீர் துடைக்க நீ வந்தாய்..
புன்னகை பூக்கிறேன் என்று உணரும் முன்
புன்னகையை ரசிக்க நீ இருந்தாய்..

எண்ணங்களுக்கு வார்த்தை தேடி முடிக்கும் முன்
என் மொழிக்கு மறுமொழி சொன்னாய் நீ..
காதலை நான் கொண்டாடும் முன்
என் முகத்தில் காதல் கலை தெரிந்தது என்றாய் நீ॥

இப்படி என்னை விட என்னை
நீ நன்கு உணர்ந்ததினால் தானோ
என்னை விட்டுச் சென்றாய்
என் வாழ்க்கையை எனக்காய் நான் வாழ்ந்திட...


நன்றி,
நாணல்