Monday 30 July 2012

ரகசிய சினேகிதனே…


வெட்கப்படவைக்கும் உன் வினைக்கு
உன்னைச் சுடுவதே
பழமையின் மொழி,
மாறாக
முற்பகல் செய்த காதலின் பயனால்
சலுகைகள் உனக்கு கிட்டுவதும்
பழமையின் மொழியே!



♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


உன்னுடன் பேசியபின் தான்
எந்நாள் முழுமை பெறுகிறதென
உன்னுடன் பேசாதிருந்த
நாளொன்றில் புரிந்தேன்!



♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


ராவணனை மிஞ்சிய பல
அவதாரங்களெடுத்தவன் நீயோவென
சந்தேக்கின்றேன்
பல நெருங்கிய நண்பர்களாலும்
ஈடுசெய்ய முடியா
உன்னிழப்பில் தவிக்கையில்!



♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


காற்றில் மிதக்கின்ற
செல்ல கையோங்கல்கள்
தரும் அலாதி
பறிமாறிக்கொண்ட முத்தங்களைக்
காட்டிலும் அதிகமே! 



முந்தையப் பதிவுகள் - 12,34, 5, 6


நன்றி, 
நாணல்