Monday 24 August 2009

சிங்கை நாதருக்காக கூட்டுப் பிரார்த்தனை....

நம் நண்பர் செந்தில் நாதர் அறுவை சிகிச்சை முடிந்து நலம் பெற கூட்டு பிரார்த்தனையில் இணைவோம்...

அறுவை சிகிச்சை விபரம்:

நாள்: 27 ஆகஸ்ட் 2009
நேரம்: காலை எட்டு மணி சிங்கப்பூர் நேரம் (இந்திய நேரப்படி காலை ஐந்தரை மணி)
சிகிச்சைக்கான குறைந்தபட்ச நேரம்: ஏழு மணி நேரங்கள்.


நண்பர்கள் அனைவரையும் சிகிச்சை நடக்கும் நேரத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் இணையும்படி கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்குத் தெரிந்த வழிபாட்டுத் தளங்களிலும் செந்தில்நாதனுக்காக வழிபட கேட்டுக்கொள்ளுங்கள்.

நன்றி,
நாணல்

Friday 14 August 2009

யாதுமானவனே...

பிறந்தநாள் முதலாய்
பல வகை
கலன்களை அணிந்திருக்கிறேன்
இன்றைக்கு மட்டும் ஏதோ
புதுவித உணர்வு என்னுள்...

நீ
கட்டிய மஞ்சள் தாலிக்குள் தான்
என் வாழ்க்கை உள்ளதோ..

நீ
போட்ட மூன்று முடிச்சுகள்
சொன்னது 'நீ மூவுலகிற்கும்
சொந்தமானவளென்று'

பொன்னாலான தாலியை
சுமக்கிறேன் இன்று முதல்
என் நெஞ்சுக்குள்...
நீ
மட்டுமே இருக்கிறாய்
என் நெஞ்சுக்குள்
வெகுநாள் முதலாய்...

நீ
சூட்டிய செந்தூரம்
சொன்னது 'என்
உதிரத்தினுள் நீ கலந்தாயென'

என் வலிகள் அனைத்தையும்
உன்
விழிகள் பார்த்து மறக்கின்றேன்..

என் சொந்தங்கள் அனைத்தையும்
உன்
உருவில் பார்த்து மயங்குகின்றேன்..

என் வாழ்வின்
மொத்தம் உணர்கின்றேன்
நீ
தந்த அந்த ஒற்றை
முத்தத்தில்..

நீ
தந்த இத்தனை பரிசுக்கு
பதிலாய் வெட்கித்தலை குனிகிறேன்,
உனக்குத் தரவேண்டி
சேகரித்த
என் வாழ்க்கையை மறந்து ...


நன்றி,
நாணல்