Showing posts with label ரகசிய சினேகிதனே…. Show all posts
Showing posts with label ரகசிய சினேகிதனே…. Show all posts

Sunday, 30 September 2012

ரகசிய சினேகிதனே…

செல்பேசியின் க்ளிக் சத்ததிற்குப் பின்
உடனே அதன் திரையை
எட்டிப்பார்க்கும் குழந்தையென
உன் கண்களை எட்டிப்பார்க்கின்றேன்,
அதில் பதிந்த நம் காதலை உறுதிசெய்ய!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

என் செவிக்குள் ஒலிக்கும் இசைக்கேற்ப
தூரத்து குழந்தையின் நடனம்
அமைவ‌தாய் உணர்கின்றேன்
உந்தன் பரவசம்
என் காதலாலென‌ உணர்கையில்..


♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

புதியதாய் கற்ற‌ எழுத்துக்களை
கண்படும் வார்த்தைகளில் எல்லாம்
துழாவும் ம‌ழ‌லையென‌ உன்னில்
என்னைத் தேடிக்கொண்டிருக்கிறேன்!


முந்தையப் பதிவுகள் - 12,34, 5, 6, 7

நன்றி,
நாணல்

Monday, 30 July 2012

ரகசிய சினேகிதனே…


வெட்கப்படவைக்கும் உன் வினைக்கு
உன்னைச் சுடுவதே
பழமையின் மொழி,
மாறாக
முற்பகல் செய்த காதலின் பயனால்
சலுகைகள் உனக்கு கிட்டுவதும்
பழமையின் மொழியே!



♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


உன்னுடன் பேசியபின் தான்
எந்நாள் முழுமை பெறுகிறதென
உன்னுடன் பேசாதிருந்த
நாளொன்றில் புரிந்தேன்!



♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


ராவணனை மிஞ்சிய பல
அவதாரங்களெடுத்தவன் நீயோவென
சந்தேக்கின்றேன்
பல நெருங்கிய நண்பர்களாலும்
ஈடுசெய்ய முடியா
உன்னிழப்பில் தவிக்கையில்!



♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥


காற்றில் மிதக்கின்ற
செல்ல கையோங்கல்கள்
தரும் அலாதி
பறிமாறிக்கொண்ட முத்தங்களைக்
காட்டிலும் அதிகமே! 



முந்தையப் பதிவுகள் - 12,34, 5, 6


நன்றி, 
நாணல்

Tuesday, 15 November 2011

ரகசிய சினேகிதனே…

கண்ணிமைக்கும் நேரத்தில்
உன் உதட்டோரத்
திருஷ்டிப்பொட்டாக‌
உருவெடுக்கிறது
என் கண்ணின் மை!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

சீராக எழுதிய
தமிழின் எழுத்துக்களை விட‌
உன் பெயராய் உருபெற‌
சிதறிய தமிழின் எழுத்துக்கள்
தரும் மயக்கமே அலாதி!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

உனக்கு தரவேண்டி நான் சேமித்த
முத்தப்பரிசுகளையெல்லாம்

நீ எனக்களித்த பரிசுப்பொருட்களே
தட்டிப்பறித்தால்
என் செய்வேன் நான்!

முந்தையப் பதிவுகள் - 1, 2,3, 4, 5


நன்றி,

நாணல்

Sunday, 28 August 2011

ரகசிய சினேகிதனே…

உனது கொஞ்ச நேரக்
கெஞ்சல்களுக்காகவே,
உயிர்க் கொள்கிறது
எனது கொஞ்ச நேரத் திமிரும்!!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

அர்த்தமில்லா அர்த்தங்கள்
நிறைந்த அபத்தங்களும்
அர்த்தம் தரும்
நமது உரையாடல்களில் மட்டும்!!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

காதலின் அழகைக் கூட்டும்
சுவாரசியமான தேடல்களுக்காகவே
ரகசியங்கள் காக்கப்படுகின்றன
காதலின் தேடலில்!!


முந்தையப் பதிவுகள் - 1, 2,3, 4


நன்றி,
நாணல்

Wednesday, 2 March 2011

ரகசிய சினேகிதனே…

“வர வர
உன் ச‌மைய‌லின் ப‌க்குவ‌ம்
கூடிக்கொண்டேயிருக்கிற‌து”,
என‌
புக‌ழும் தாய்க்கு,
எப்ப‌டி சொல்லுவேன்
உன்னுடன் பேசிக்கொண்டே
சமைக்கும் போது மட்டுமே
சுவையும் கூடுகின்றதென்று!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

வாச‌லில் நின்று கொண்டே
அவ்விலாச‌த்தைக் கையிலேந்தி
விசாரித்துக் கொண்டிருப்ப‌வ‌ளைப் போல்
என்னுள் இருக்கும்
உன்னைய‌றியாது
காதலைக் கையிலேந்தி
விசாரித்துக் கொண்டிருக்கிறேன் நான்!”

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

“எப்ப‌வுமே இப்ப‌டி தானா நீ?”,
என‌
நீ என்னைக்
கேட்கும் போதெல்லாம்
நீ என்ன‌ருகிலே இருந்தால்
ம‌ட்டுமே இப்ப‌டி
என‌ சொல்ல‌ விரும்பி,
“எப்ப‌வுமே இப்ப‌டி தான்”
என‌ ம‌ட்டும் சொல்லி
உனை என் கால‌த்துக்கும்
க‌ட்டிக்கொள்கிறேன்!


முந்தைய பதிவு -
1, 2,3


நன்றி,
நாணல்



Friday, 18 February 2011

ரகசிய சினேகிதனே…

உன்னுடன்
தொலைபேசுகையில் ம‌ட்டும்
அருகிலிருக்கும் தோழிக‌ளின்
க‌வ‌ன‌த்தை ஈர்க்க‌ முயற்சிக்கிறேன்,
ந‌ம்மைப் ப‌ற்றி
அவ‌ர்க‌ள் பேச‌விற்கும்
கேலிப்பேச்சிற்கு
வித்திடும் வ‌கையாய்!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

விடிந்த‌தும்
அனுப்ப‌ வேண்டிய‌
காலை வ‌ண‌க்க‌
குறுஞ்செய்திக்காக,
இர‌வெல்லாம் க‌ண்விழித்து
யோசிக்கின்றேனே!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

அவ‌சிய‌மில்லா போடாக்க‌ளும்
அவ‌ச‌ர‌மான‌ போடிக்க‌ளும்
நிலைநாட்டுமே
அவ‌ச‌ர‌வ‌சிய‌மான‌
ந‌ம் காத‌லை!

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

தீண்ட‌ தீண்ட‌
இசைக்கும் வீணைப் போல்
பேச‌ப் பேச‌
உன‌க்கும் என‌க்கும்
காத‌லுக்குமான‌
புரித‌ல் நீள்கிறதே!

முந்தைய பதிவு - 1, 2


ந‌ன்றி,
நாண‌ல்

Sunday, 23 January 2011

ரகசிய சினேகிதனே…

தினம் பேசும் தோழிக்கு
ஏனோ இப்போதெல்லாம்
நான் பேசுவது புரிவதில்லையாம்
அவளுக்கெப்படி சொல்வேன்
என்னுள் இருக்கும் நீ
தான் இப்போதெல்லாம்
என்னையும் மீறி அதிகம்
பேசிக்கொண்டேயிருக்கிறாய் என

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

செல்லப் பெயர்கள்
பல கொண்டு விளித்தும்
ஊடல் பொழுதுகளில்
மெளனமாக உனைக் கொல்லும்
விழிகளின் விளிப்பு தான்
பிடிக்குமென்கிறாய் நீ

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

வேற்றுமைகளற்ற வேற்றுகிரக
மனிதர்களாய்
நம் முன்னோடிகளான
ஆதிவாசிகளாய் அலைகின்றோம்
நம்மை மறந்து
நாம் மறைந்த நேரங்களில்

முந்தைய பதிவு - 1

நன்றி,
நாணல்



Saturday, 18 December 2010

ரகசிய சினேகிதனே…

‘ஆயிரம் முறை திருடிய
அதிசயத் திருடன் கைது’
செய்தி பார்த்ததும்
பதறித்தான் போனேன்
ஆயிரம் முறை என் இதயத்தை
திருடிய அதிசயத் திருடன்
உனையும் கண்டுகொள்வரோ என

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

நீயும் கவிஞனென
தெரிந்ததில் இருந்து
அவசர அவசரமாய்க்
கவிதை உருப் பெறுகின்றது
நம் உரையாடல்கள்
என் கவிதைப் பக்கத்தில்

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥

தொழில்நுட்பத்தின் புரட்சி
உனை என்றும் என்னருகில்
இருக்கவைத்தாலும்
என் வெட்கங்களையும்
என் மெளனங்களையும்
மொழிபெயர்க்க முடியா கைபேசி
சொல்கிறது தொழில்நுட்பம் இன்னும்
வளர வேண்டுமென


நன்றி,
நாணல்