Tuesday 4 October 2011

ப‌ரிதாபக் காத‌ல்!

எனக்கானவன் நீயில்லையென‌
தெளிந்த‌ எதார்த்த‌த்திற்கும்
என்ன‌வ‌ன் நீயில்லையென‌
மெலிந்த‌ என் போராட்ட‌த்திற்கும்
இடையில்
நம்
ப‌ரிதாபக் காத‌ல்!

$%^&#@$

ஜானேற‌ முழ‌ம் ச‌ருக்கும்
ச‌ருக்கு ம‌ர‌ம் போல,
உன் நினைவுகள்
சிறுக மறைந்து
பெருக மலர்ந்து
என்னைக் கொல்லுதே!

$%^&#@$

தூரத்துப் புள்ளியைத் தொட்டிடும்
முயற்சியென சாலைகள்
நீண்டு கொண்டேப் போனாலும்,
கிட்டாத புள்ளியென
மனதின் ஆசைகள்!

நன்றி,
நாணல்

2 comments:

நட்புடன் ஜமால் said...

கிட்டாதாயின் வெட்டன மற‌

இது காதலுக்கு ஒத்தே வராது ...

நாணல் said...

உண்மை தான் ஜமால் :(