Tuesday 25 January 2011

பேருந்தில்..

ஒரு பன்னிரண்டு ரூபாய்
பயணச் சீட்டில்
அம்பத்தூரிலிருந்து வேளச்சேரிக்கு
பயணிக்கும் இருவர்,
ந‌ட‌த்துன‌ரின் வ‌சவுக‌‌ளை
ஜீர‌ணித்துக்கொண்டும்
சில்ல‌றையில்லையென‌ வாதிடும்
ச‌க‌ப‌ய‌ணியின் வ‌ழ‌க்குக்கு
தீர்ப்ப‌ளித்துக்கொண்டும்
ஒவ்வொரு நிறுத்த‌ங்க‌ளிலும்
இற‌ங்கிகொண்டு
அடையாரிலிருந்து கொண்டே
கைபேசியில் உரையாடிக்கொண்டே
என்னுட‌ன் ப‌ய‌ணிக்கிறாள்
என் தோழி.

‰00‰

விழித்திருந்தால்
ம‌னிதாபிமான‌த்துகாய்
இருக்கை ப‌றிபோயிடுமென‌
தூங்காது தூங்கிய‌
நிலையில் நான்!

ந‌ன்றி,
நாண‌ல்

No comments: