Sunday 13 February 2011

மீண்டும் யாரோ ஒருவரால் …

எனக்கான
வரையறைகளும் அர்த்த‌ங்க‌ளும்
நான‌ல்லாத,
என் ப‌ங்குமில்லாத‌
யாரோ ஒருவ‌ரால்
தீட்ட‌ப்ப‌டும் போது,

அதை
கடைநிலை வாச‌கியாய்ப்
ப‌டித்து
முடியும் முடியாதெனப்
பல‌‌ பின்னூட்ட‌மிட்டு,

எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ச‌ன‌ங்களைச்
சொற்பிழையோ
அர்த்த‌ப் பிழையோ இல்லாது
பேசிப்,

புல‌ப்படாத‌
ப‌ல‌ உண‌ர்வுக‌ளை
அவ‌ர‌வ‌ர் விதிக‌ளுக்கேற்ப
அவரவர் புரிதலுக்கேற்ப‌
வெளிப்ப‌டுத்தி,

இனியிது போதுமென‌
ச‌ரிந்து சாய்கையில்,
என் சுய‌த்திற்கான
புதிய‌
வ‌ரைய‌றைக‌ளும் அர்த்த‌ங்க‌ளும்
மீண்டும் யாரோ
ஒருவரால் வ‌டிக்க‌ப்ப‌டுகின்ற‌து!

நன்றி உயிரோசை

ந‌ன்றி,
நாண‌ல்

4 comments:

catonthewall said...

ayyoo ammaa uyirmmai piece :)

நாணல் said...

anupiyaachu.. :)

அன்புடன் நான் said...

கவிதை நல்லாயிருக்குங்க...

நாணல் said...

நன்றிங்க கருணாகரசு :)