Tuesday 6 September 2011

நீட்சி...

திருமணத்தடை நீங்க
மஞ்சற்கயிறு;
பிள்ளைப்பேறு பெற
மரத்தாலான தொட்டில்;
வேண்டுதல்கள் நிறைந்த
காகித மாலைகள்;
வெற்றி கிட்டிய பரவசத்தில்
மஞ்சள்குங்கும அபிஷேகமென
முக்காலத்து நம்பிகைகள்
பொய்க்காத வரையேனும்,
தன் வாழ்நாள் நீளுமென
நம்பிக்கை கொள்கிறது
திருவிடம் வாசம் செய்கின்ற
நற்பேறுடைய ஓங்கல்!

நன்றி,
நாணல்

No comments: