Thursday 12 January 2017

பேரழகன்

கல்நெஞ்சக்காரியடா நான்
இல்லையேல்
கல்லில் வடித்த
அழியா சிற்பம் போல்
உன் நினைப்போடு மட்டுமே
ஜீவித்துக் கொண்டிருப்பேனா….

என் தோழிக்கு
உனை அறிமுகம் செய்ய
உன் புகைப்படங்களில்
சிறந்ததைத் தேடுகையில் உணர்ந்தேன்
என்றுமே நீ
எனக்கு பேரழகன் தானென்று…

நாள் :  22-02-2010

நன்றி,
நாணல்

No comments: