Monday 4 October 2010

காதல் சொல்லி ஏற்றுக்கொள்ளப்படாவிடின்..

தூங்காது அடுத்தென்ன‌
செய்யப்பட வேண்டுமென‌
காற்றில் திட்டங்கள்
தீட்டிக்கொண்டிருக்க
வேண்டிய அவசியமில்லை..

@#$%^&

உன்னொருவனு(த்தி)க்காய் நானிருக்கிறேன்
என நம் சந்தோஷத்தின் எல்லையை
ஒரு இதயத்தோடு
சுருக்கிக்கொள்ள
வேண்டிய அவசியமில்லை..

@#$%^&

காரணங்கள் தேடி
கண்ணீருக்கு விடுதலை
தர வேண்டியிருக்காது..

@#$%^&

வில‌ங்குகளால் கட்டுண்டு
மனித விலங்காய்
நடமாட வேண்டியிருக்காது..

நன்றி,
நாணல்

No comments: