Wednesday 10 March 2010

காதலருவி

பருவத்தின் உச்சியில் பிறந்து
நினைவுகளில் ஆழ்ந்து மூழ்கி
இன்ப துன்பங்களில் உழன்று
வழி நெடுக்க உயிர் கொணர்ந்து
சலசலக்கும் கூ(ஊ)டலோடு இசைபறப்பி
வாழ்க்கைக் கடலின் அமைதியான நடுக்கடலில்
நிலவோடு போட்டிக்கொண்டு
அமைதியாக பயணிக்கிறது நம் காதல்

நன்றி
நாணல்

5 comments:

ஆயில்யன் said...

//நினைவுகளில் ஆழ்ந்து மூழ்கி
இன்ப துன்பங்களில் உழன்று
வழி நெடுக்க உயிர் கொணர்ந்து
சலசலக்கும் கூ(ஊ)டலோடு//

அழகா வந்திருக்கு வரிகள் :)

நட்புடன் ஜமால் said...

சலசலக்கும் கூ(ஊ)டலோடு]]

:)

கவி அழகன் said...

நெஞ்சை தொட்டு தொட்டு செல்கின்றன
தொடர்ந்தும் எழுதுங்க்கள்

நாணல் said...

நன்றி ஆயிலயன் அண்ணா... , ஜமால் , யாதவன் :)

அன்புடன் நான் said...

நல்ல கவிதை.
பாராட்டுக்கள்.