Sunday 30 October 2011

ந‌க‌ர‌த்துப் பெருவிழாக்க‌ள்!

உறவுகளின் மேன்மை மறந்து
‌நம்மை மட்டுமே சார்ந்த ஆசைகளோடு
நெரிசலான கடைவீதிகளில் உலாவும் நாம்,
ஊர் கூடி உறவு பேண‌‌
வர‌வேற்கப்பட‌வேண்டிய‌ பெருவிழாக்களை,
அன்புள்ளங்களின் அரவணைப்பிற்குப் பதிலாய்
காவல்துறையினரின் பலத்த பாதுகாப்போடும்
பட்டறிந்தோரின் கண்காணிப்பிற்குப் பதிலாய்
கண்காணிப்பு நிழற்படவியின் அடியிலும் தானே
வர‌வேற்கின்றோம் நகரத்துப் பெருவிழாக்களை!

%$^&@#$

ரகசியக்கண்கள் பொருந்திய‌
கண்காணிப்பு நிழற்படவிக்கு
ரகசியக்கரங்களும் பொருத்தப்பட்டிருந்தால்,
சில விபத்துக்களும்
பல குற்றங்களும்
தவிர்க்கப்பட்டிருக்கலாம்!

ந‌ன்றி,
நாண‌ல்


1 comment:

நட்புடன் ஜமால் said...

நகரத்து பெருவிழாக்கள் மட்டுமல்ல

கிராமத்திலும் தொலைந்து போய் விட்டன விழாக்கள் ...

நிழற்படவி - ஆகா! அழகு புது சொல்லாடல்