Friday 12 February 2010

ஆசை… உன் நிறைவேறா பேராசை…

கார்த்திகை மாதத்து
மழையென என் காதலை
உன் மீது கொட்டிவிட வேண்டுமென்பது
என் எண்ணம்….
வானிலை அறிக்கை படித்து
மழையில் நனையாமல்
நீ
தப்பி விட முடியாதென்பது
என் திண்ணம்…


என்னிடம் தேங்கியுள்ள
உன் மீதான என் காதலை
கொட்டி தீர்த்தப் பின்
நீ கேட்டதற்காக
உனை பிரியலாமென்றால்,
தீராதிருக்கே இந்த காதல்
பாவம் என் செய்வேன் நான்
நீ கேட்டும்,
உனக்கு விடுதலை தர
நான் இசைந்தும்,
உன் இந்த ஆசை
நிறைவேறாது கண்ணே…



நன்றி,
நாணல்

No comments: