Tuesday 16 February 2010

காதலெனின்...

எனக்குள் எழும் கேள்விகளுக்கு

என் கேள்விக்கு முன்

நீயாக பதில் கூறும்

புரிதலுக்கு மூலம் காதலெனின்

நீயும் என்னைக் காதலிக்கிறாய்…


இன்னொரு காதல்

என்னுள் நுழையுமா என

நான் குழம்பி நிற்கையில்

என்றும் வாரா நீ

இன்று மட்டும்

என் வழியில் புலப்பட்ட

தற்செயலுக்கு மூலம் காதலெனின்

நீயும் என்னைக் காதலிக்கிறாய்…


உன்னைப் பற்றி யோசிக்கவே

நேரமில்லா நீ

என் சிறுபிள்ளைக் கண்ணீருக்கு

ஆறுதல் கூறும்

அக்கறைக்கு மூலம் காதலெனின்

நீயும் என்னைக் காதலிக்கிறாய்



நன்றி,
நாணல்

3 comments:

உயிரோடை said...

க‌விதை ந‌ன்று

Anonymous said...

sumthing different :-) nice

கமலேஷ் said...

நன்றாக இருக்கிறது ...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...