Monday 18 October 2010

விடையில்லா கேள்விக‌ளை..

தூங்காது நீ விழித்திருக்க‌
தூங்கியும் உனை நினைத்திருக்க‌
வார்த்தைகள் மறந்த மௌனத்தை மொழிபெயர்க்க‌
முடியாம‌ல் நானும் த‌வித்திருக்க‌
த‌னிமையையும் மௌன‌த்தையையும் உடைக்க‌
உனை ம‌ற‌க்க‌ எத்த‌னிக்கிறேன்
&^%$#@!
ம‌ல‌ர்ந்து
ம‌ண‌ம் ப‌ர‌ப்பி
வண்டை
குறை கூறுவ‌தில்
அர்த்த‌மில்லை
ம‌லர்ச்சியும்
ம‌ண‌மும்
இய‌ற்கையாய் நிக‌ழ்கையில்
உனை
குற்றம் கூறியாகப்போவ‌து
ஒன்றுமில்லை
ம‌ல‌ர்வ‌ண்டாக‌
இருக்கும் ம‌ட்டும்
எதுவும் குற்ற‌மில்லை
ந‌ன்றி,
நாண‌ல்

7 comments:

Unknown said...

கலக்கறீங்க :)))

ப்ரியமுடன் வசந்த் said...

நல்லாருக்குங்க ..!

மணம் பரப்பும் என்றிருக்க வேண்டுமோ?

நாணல் said...

நன்றி ஸ்ரீ, வசந்த் :) .

தினேஷ்குமார் said...

கவிதை நல்லாருக்கு

நாணல் said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி தினேஷ் :)

மயாதி said...

நல்லாருக்குங்க ..!

நாணல் said...

நன்றி மயாதி :)