Saturday 20 November 2010

கண்களின் பரிசு

இந்த வார உயிரோசையில் இந்த கவிதை ... நன்றி உயிரோசை

*****************


உனக்கான தேவைகள்
பூர்த்தியாகும் வரை
என் வேண்டுதல்கள்
ம‌திக்க‌ப்ப‌ட்ட‌ன‌!

உன் வேண்டுத‌ல்க‌ள்
நிஜ‌மாகும் வ‌ரை
என் இருத்தல்
கொண்டாட‌‌ப்ப‌ட்ட‌து!

திரைப்ப‌ட‌ம் முடிந்து
க‌லையும் கூட்ட‌மென
சொல்லாது மௌனமாய்
நீயும் க‌லைந்து சென்றாய்!

விம‌ர்ச‌ன‌ க‌ல்லெறிதலை
பரிசாகக் கொண்டு
பார்வையாள‌னால் ஒதுக்க‌ப்ப‌ட்ட
கடைசிக்காட்சியாய்
திரையில் ஓடிக்கொண்டிருந்தேன்!

ப‌ரிகாச‌ங்க‌ள் மீறிய‌
உண‌ர்வ‌ற்ற நிலையில்
உயிரோடு திரிந்திருந்தேன்!

நானொழிந்த‌
அடுத்த‌ காட்சியின்
ஒத்திகையில் நீ!

காட்சியின் நிறைவாய்
உன் பெய‌ருக்குப் பின்
வேறொருத்தியின் பெய‌ர்
நிழ‌லாடுகையில்,
நேற்றே இற‌ந்த
பாட்டியின் பிண‌த்தை எடுக்கையிலே
அணைப‌டாது வ‌ரும் க‌ண்ணீரை
என் க‌ண்களும் ப‌ரிசாக‌க்கொண்ட‌து!

நன்றி,
நாணல்

2 comments:

sakthi said...

அருமையான கவிதை நாணல்.....

தொடருங்கள்....

நாணல் said...

நன்றி சக்தி :)