Saturday 26 February 2011

உன் ஞாப‌கங்களும்!!

புது வருடம்
பிறந்தும்
தன்னையறியாது
வந்து விழும்
பழைய வருடத்தைப்
போன்றே,
பிரிந்த பின்பும்
என்னையறியாது
வந்து விழும்
உன் பெயரின் உச்சரிப்பு
நிலைநாட்டுமே
நம் எஞ்சிய நேசத்தை!!

#$%^&#@

திரையில்
சில நொடிகள்
தங்கி ஓய்வெடுத்து
புகைப்படமாகப்
பதிவான பின்
சரசரவென நகரும்
சாலையின் வாகனங்களைப்
போன்றே
உன் ஞாப‌கங்களும்!!

நன்றி,
நாணல்

2 comments:

அன்புடன் நான் said...

முதல் கவிதை பிடிச்சிருக்கு...

நாணல் said...

நன்றிங்க கருணாகரசு.. :)