Saturday 5 March 2011

க‌விஞ‌னும் காத‌லும்

“மனதிற்குப் பிடிக்காதது
மறதிக்குப் போகட்டும்”
என்றான் கவிஞன்;
எனக்கோ
பிடிக்காதவைகளை
உன்னுடன் பகிர்கையில்,
ந‌ம் நெருக்க‌ம்
கூடுமென்பதால்
பிடிக்காதவைகளும்
பிடித்தவைகளாகின்றன!

–00–00–

வார்த்தைக‌ளின் ஓட்ட‌ம்
குறையும் போது,
பிடித்த‌ எழுத்தாள‌ரின்
எழுத்தைப் புர‌ட்டும்
க‌விஞ‌னாய்,
வாழ்க்கையில் ஊட்ட‌ம்
குறைகின்ற‌ பொழுது
ந‌ம் காத‌லைப்
புர‌ட்டிக் கொண்டிருக்கிறேன் நான்!


ந‌ன்றி,
நாண‌ல்

1 comment:

RAJA RAJA RAJAN said...

அருமை... அருமை...