Sunday 7 June 2009

உன்னை நான் மறக்கிறேனேன்று ...

எந்தன் சுவாசமாய் இருந்த நீ

எப்பொழுதாவது நுகரும் வாசமாய்

மாறிய போது உணர்ந்தேன்

உன்னை நான் மறக்கிறேனேன்று ...


எந்தன் பார்வையாய் இருந்த நீ

எப்பொழுதாவது ரசிக்கும் காட்சியாய்

மாறிய போது உணர்ந்தேன்

உன்னை நான் மறக்கிறேனேன்று ...


எந்தன் மொழியாக இருந்த நீ

எப்பொழுதாவது படைக்கும் கவிதையாய்

மாறிய போது உணர்ந்தேன்

உன்னை நான் மறக்கிறேனேன்று ...


எந்தன் கேள்வியாக இருந்த நீ

எப்பொழுதாவது கேட்கத்தோன்றும் பாடலாய்

மாறிய போது உணர்ந்தேன்

உன்னை நான் மறக்கிறேனேன்று ...


எந்தன் உணர்வாய் இருந்த நீ

எப்பொழுதாவது தேகம்தீண்டும் தென்றலாய்

மாறிய போது உணர்ந்தேன்

உன்னை நான் மறக்கிறேனேன்று ...


எந்தன் காதலாக இருந்த நீ

எப்பொழுதாவது நினைத்து கண்ணீர்விடும்

முதலும் கடைசியுமான காதலாய்

மாறிய போது உணர்ந்தேன்

உன்னை நான் மறக்கிறேனேன்று ...


நன்றி,

நாணல்




No comments: