Saturday 13 June 2009

32 கேள்விகள் - இவ்வளவு பெரிய கேள்வித்தாளா....

இவ்வளவு பெரிய கேள்வித்தாளா.... (இதை பஞ்சதந்திரம் படத்தின் தேவயானி ஸ்டைலில் படிக்கவும்.. ) நெகட்டிவ் மார்க் எல்லாம் இருக்காதுன்னு நினைக்கறேன் ... ;)

01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

பொதுவாவே நமக்கு ஆர்வக்கோளாறு கொஞ்ச அதிகம்... அப்படி கவிதைங்கற பேர்ல கிறுக்கிட்டு இருந்தப்ப நமக்குன்னு ஒரு பட்டப் பேரு வெச்சுக்கிட்டா என்னனு ஒரு யோசனை... சரின்னு என் நண்பர் கிட்ட கேட்டேன்.. ஏதாவது நல்லாப் பேரு சொல்லுப்பான்னு... அவருக்கு இசைல ஆர்வமான்னு தெரியலை சுருதின்ற பேரு எப்படி இருக்குன்னு கேட்டாரு.. வேணும்னா அதையே வெச்சுக்கோன்னு சொன்னாரு.. பேரு நல்லா தான் இருக்கு...ஆனா வித்தியாசமா வேணும்னு(அப்ப எதுக்கு என் கிட்ட கேட்டன்னு அப்ப முனுமுனுத்திட்டு போயிட்டாரு, எதையோ வெச்சித் தொலைன்னு... ) மறுபடியும் யோசிக்க ஆரம்பிச்சேன்... அப்ப தான் நானும் என் தோழியும் அவங்க பிராஜக்ட் விஷயமா ஒருத்தரை பார்க்கப் போனோம்... அவர் பேரு என்னனு கேட்டா நாணல்னு சொன்னாரு... அட வித்தியாசமா இருக்கேன்னு அதை சுருட்டிடேன்... ;) அப்புறம் இமையில் ஐடி அது இதுனு உருவாக்கும் போது அந்த பேரை உபயோகிச்சி என் பேரு நாணல் என் பேரு நாணல்னு ஊர்பூரா சொல்லியாச்சு (நமக்கு பெயர் சஜஸ்ட் பண்ண நண்பருக்கு சேர்த்து தான், இதுவும் நல்லா தான் இருக்கு பரவாயில்லைன்னு பாராட்டையும் வாங்கிட்டோம்ல) ...அப்புறம் பிளாக் ஆரம்பிக்கும் போதும் அதே பேர்ல தொடங்கிட்டேன்..

இவ்வளவு பெரிய கொசுவர்த்திக்கு பின்னாடி இருக்கற பெயரை பிடிக்காம போகுமா.. நிஜ பெயர் எந்த அளவுக்கு பிடிக்குமோ அந்த அளவுக்கு இந்த பெயரும் பிடிக்கும்.. இன்னும் சொல்லப் போனா நிஜப் பெயரை விட "நாணல்" மிகவும் பிடித்த பெயர்...பெயருக்கு ஏற்ற மாதிரி இருக்கிறேனா தெரியாது.. இருக்க முயற்சிக்கிறேன்... :)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
வாழ்க்கைன்னு வந்துட்டா அழுகை சிரிப்பு எல்லாம் வரும் போகும் ... அழுகை வரும் பொது அழுதுட்டு அதை அப்பவே மறந்துடுவேன்..


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு ரொம்ப பிடிக்கும்... தமிழ் கையெழுத்து ரொம்ப பிடிக்கும்... அனால் இப்ப எழுதி பழக்கம் விட்டுப்போனதுனால சரியா எழுத வர மாட்டேன்கிறது... :(

4).பிடித்த மதிய உணவு என்ன?
பிடித்தது பிடிக்காதுன்னு தனியா இல்லை... நல்லா பசிக்கும் போதும் சூடான சைவ சாப்பாடு பிடிக்கும்...

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இதுக்கு தமிழ் பிரியன் அண்ணா சொன்ன மாதிரி தான் ... எனக்கு ஒத்து போறவங்க கூட உடனே நட்பு வெச்சுப்பேன்..

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
தண்ணிரைப் பார்த்தாலே சந்தோசம் தான்...அது அலையடிக்கிற கடலா இருந்தா என்ன பொழியுற, அருவியா இருந்தா என்ன...

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்டிப்பா அவரோட கண்கள் பார்த்து பேசுவேன்.. அப்புறம் உதடுகள்ளேர்ந்து வெளி வர வார்த்தையின் உண்மையான நோக்கம் என்ன என்பதை கணக்கிடுவேன்...

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் : உண்மையா இருக்கணும்னு இருப்பேன்..
பிடிக்காத விஷயம் : சில நேரம் ஏமாற்றத்தை தாங்க முடியாம மணிக்கணக்கா அழுவேன்.. அதுவும் நான் நெருக்கமா நினைக்கிற நண்பர்கள் , உறவுகள் பக்கத்துல இருந்துட்டா இன்னும் அதிகம் ...

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
மன்னிக்கவும்... இது அவுட் ஆப் சிலபஸ் ... ;)

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
காலத்தின் கட்டாயத்துனால தொலைத்த சில நண்பர்கள் ...

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கிரீம் மற்றும் பிரவுன் கலவையில் ...

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
சமிபத்தில் வந்த குளிர் 100 படத்தில் இருந்து சிம்பு பாடிய "மனசெல்லாம்" பாடல்..

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு தான் எனக்கு பிடிக்க கலரு.. ;)

14.பிடித்த மணம்?
மல்லிகை பூவின் மணம் , மண் வாசனை , குழந்தையின் மீது வரும் பால் வாசனை..

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

சென்ஷி அண்ணா - பல வித்தியாசமான பதிவுகளை எப்படி தான் எழுதராறோன்னு படிப்பேன்..

மயாதி - ஒரு நாளைக்கு ரெண்டு மூனு கவிதைன்னு அசத்திகிட்டு இருக்கறவர்..


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
தமிழ் பிரியன் அண்ணா.. அவர் எழுதுற எல்லா பதிவுமே வித்தியாசமா அருமையா இருக்கும்... எனக்கு ரொம்ப பிடிச்சது இப்ப நான் எங்க இருக்கிறேன் ...

ஸ்ரீ ... இவங்க எழுதுற எல்லா கவிதையும் பிடிக்கும்.. எப்படிம்மா இப்படி யோசிக்கறேன்னு கேப்பவும்கேட்ப்பேன்.. வலை உலகில் எனக்கு கிடைத்த முதல் சகோதரியும் தோழியும் இவங்க தான்....

பூர்ணிமா - இவங்களை சமிப காலமா தான் தெரியும்..என்னோட நல்ல தோழி... பரிக்ஷித் பற்றி எழுதுற பதிவுகள் .. கவிதைகள்னு எல்லாம் பிடிக்கும்...

17. பிடித்த விளையாட்டு?
எதையும் உருப்படியா விளையாட தெரியாது... ஆனால் விளையாடுவேன்னு குதிசிக்கிட்டு போய் கை கால் வீ ங்கி அமைதியா வந்து உட்கார்ந்துடுவேன்.. ;)

18.கண்ணாடி அணிபவரா?
கணினியில் வேலை செய்யும் போது மட்டும்..

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
சண்டை காட்சிகள் நிறைய இல்லாமல் யதார்த்தமான படங்கள்...

20.கடைசியாகப் பார்த்த படம்?
மாசிலாமணி...

21.பிடித்த பருவ காலம் எது?
மழைக் காலம்..

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
மனம் என்னும் மார்க்கம் அப்படிங்கிற சுயமுன்னேற்ற புத்தகம் ...

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
கணக்குலாம் இல்லை... மாற்றனும்னு தோணும் போது மாற்றுவேன்.. இல்லை மாசக்கணக்கில் ஒன்றே குட இருக்கும்...

24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்த சத்தம் : மெல்லிய இசை , மழலையின் சிரிப்பு, கடலின் அலை
பிடிக்காத சத்தம் : இறைச்சல் எழுப்பும் வாகனத்தின் ஹார்ன் சத்தம்

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
கோவா..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
கவிதை எழுதுவது, மனிதர்களை படிப்பது, எதையும் வித்தியாசமாக செய்ய விரும்பும் குணம்...

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பொய் பொய் பொய் ...

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
எனக்கு பிடிக்காத ஒரு செயலை யார் சொன்னாலும் செய்ய மாட்டேன், அதேப் போல் பிடித்த செயலை யார் தடுத்தாலும் செய்வேன்... சுருக்கமா சொல்லனும்னா யார் பேச்சையும் கேட்க மாட்டேன்.. என் மனசாட்சியைத் தவிர..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அப்படி ஒன்றுமில்லை ....

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
யார் கிட்டயும் ஏமாறாம யாரையும் ஏமாற்றாம வாழ ஆசை ..

31.கணவன் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம் ?
மன்னிக்கவும்... இது அவுட் ஆப் சிலபஸ் ...

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
இருப்பது ஒரு வாழ்க்கை ... அதில் யாரையும் புண்படுத்தாமல் நமக்கு விருப்பமானதை , மனசுக்கு நிம்மதி தரக் கூடியவைகளை செய்து சந்தோஷமா இருங்க... வாழ்க வளமுடன்!


பொறுமையா படித்தற்கு நன்றி..
நாணல்



23 comments:

Suresh said...

உங்களை புரிந்து கொள்ள உதவியது நல்ல பதிவு நாணல் ;-)

சென்ஷி said...

//சென்ஷி அண்ணா - பல வித்தியாசமான பதிவுகளை எப்படி தான் எழுதராறோன்னு படிப்பேன்..//

நான் வித்தியாசமான பதிவு எழுதுறேனா என்னைக்காச்சும் என் பதிவை தொறந்து பார்த்ததுண்டா??

யாராச்சும் நீ என்னடா வித்தியாசமா எழுதியிருக்கன்னு கேட்டா நான் என்னத்த காட்டுறது :(

ஆயில்யன் said...

//(இதை பஞ்சதந்திரம் படத்தின் தேவயானி ஸ்டைலில் படிக்கவும்.. )///

அதுக்கு அவுங்க நடிக்கறதுக்கு கொடுத்த அளவுக்கு காசு கொடுப்பீங்களா பாஸ்?

:))

ஆயில்யன் said...

//பொதுவாவே நமக்கு ஆர்வக்கோளாறு கொஞ்ச அதிகம்.//

இருக்கணும் இருக்கணும்! :)

ஆயில்யன் said...

//உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
மன்னிக்கவும்... இது அவுட் ஆப் சிலபஸ் ... ;)//

அட பதில் சொன்னா எக்ஸ்ட்ரா மார்க் கிடைக்குமே பாஸ்!

ஆயில்யன் said...

//யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
காலத்தின் கட்டாயத்துனால தொலைத்த சில நண்பர்கள் ...//

:((

ஆயில்யன் said...

//பொறுமையா படித்தற்கு நன்றி..//

வெல்கம்

ஆயில்யன் said...

//சென்ஷி said...

//சென்ஷி அண்ணா - பல வித்தியாசமான பதிவுகளை எப்படி தான் எழுதராறோன்னு படிப்பேன்..//

நான் வித்தியாசமான பதிவு எழுதுறேனா என்னைக்காச்சும் என் பதிவை தொறந்து பார்த்ததுண்டா??
:(//

அண்ணே உங்க பின்னவீனத்துவ பதிவுகள் படிச்சுருப்பாங்க போல ! :))

ஆயில்யன் said...

மீ த 10

நட்புடன் ஜமால் said...

அழுகை வரும் பொது அழுதுட்டு அதை அப்பவே மறந்துடுவேன்..\\

ஆரோக்கியம்!

நட்புடன் ஜமால் said...

யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
காலத்தின் கட்டாயத்துனால தொலைத்த சில நண்பர்கள் ...\\

நெகிழ்வான பதில்.

நட்புடன் ஜமால் said...

யார் கிட்டயும் ஏமாறாம யாரையும் ஏமாற்றாம வாழ ஆசை ..\\

நல்ல ஆசை!

வாழ்த்துகள்.

Thamiz Priyan said...

நல்லா பதில் சொல்லி இருக்கீங்க... :)

Thamiz Priyan said...

நாணலின் பாதைகளை புரிந்து கொள்ள முடிகின்றது.. வாழ்த்துக்கள் சகோதரி!

நிஜமா நல்லவன் said...

/ ஆயில்யன் said...

//உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
மன்னிக்கவும்... இது அவுட் ஆப் சிலபஸ் ... ;)//

அட பதில் சொன்னா எக்ஸ்ட்ரா மார்க் கிடைக்குமே பாஸ்!/


யோவ் ஆயிலு நீங்க மட்டும் சாய்ஸ்ல விட்டுட்டு அடுத்தவங்களுக்கு அட்வைஸா????

நாணல் said...

என் பாதையை புரிய வைக்க இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்த தமிழ் அண்ணா, ஸ்ரீ, பூர்ணிமா ..எல்லோருக்கும் என் நன்றி..

நன்றி சுரேஷ், ஜமால்....

சென்ஷி அண்ண்னுக்கு ரொம்ப தன்னடக்கம் போல... :)

சரியா கேட்டிருகீங்க நிஜமண்ணா, ஆயிலண்ணா எங்க பதிலைக் காணோம்... ;)

சந்தனமுல்லை said...

நல்ல பதில் சொல்லியிருக்கீங்க நாணல்!

//எனக்கு பிடிக்காத ஒரு செயலை யார் சொன்னாலும் செய்ய மாட்டேன், அதேப் போல் பிடித்த செயலை யார் தடுத்தாலும் செய்வேன்... சுருக்கமா சொல்லனும்னா யார் பேச்சையும் கேட்க மாட்டேன்.. என் மனசாட்சியைத் தவிர..
// மிகவும் பிடித்தது இந்த பதில்!

:-)

மயாதி said...

ஆகா , மாட்டி விட்டீங்களா ??

நன்றி தோழி , உங்கள் பாராட்டுக்கும், மரியாதைக்கும்.

ப்ரியமுடன் வசந்த் said...

//29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அப்படி ஒன்றுமில்லை ....//

அதெப்பிடி ஒரு சுற்றுலாத்தளத்துக்கிட்டயே போயி இப்பிடி கேக்கலாமா?

sakthi said...

தண்ணிரைப் பார்த்தாலே சந்தோசம் தான்...அது அலையடிக்கிற கடலா இருந்தா என்ன பொழியுற, அருவியா இருந்தா என்ன...

என்ன ஒரு பதில்

அசத்திட்டீங்க நாணல்...

புதியவன் said...

யதார்த்தமான பதில்கள்...

//காலத்தின் கட்டாயத்துனால தொலைத்த சில நண்பர்கள் ...//

இது நெகிழ்வான பதில்...

நேசமித்ரன் said...

தெளிவான பதில்கள்
சுவாரஸ்யமான பதிவு

MSK / Saravana said...

//யார் கிட்டயும் ஏமாறாம யாரையும் ஏமாற்றாம வாழ ஆசை ..//

thats really great..