Saturday 20 June 2009

தொலைந்த வைராக்கியம் ...

வருடக்கணக்கில் மிதிவண்டி
ஓட்ட கற்று தந்த
என் தம்பியிடம்
இன்று ஒட்டுகிறேன் பார்
என சபதமிட்டு
ஒரே நாளில் ஓட்டினேன்...
வருடக்கணக்கில் உன்னை நேசித்து
இன்றோடு உன்னை மறக்கிறேன்
என சபதமிட்டு
ஒரே நாளில் அது
கரைந்துபோவதேனோ...

நீ நேசித்த
என் கவிதைகளுக்கு
உன்படிப்பில் மட்டும் கவனம் செலுத்தென
நீ சொன்ன வார்த்தையால்
பல நாள் விடுமுறையளித்தேன் ...
நீ நேசித்த
என்னை
உன் வாழ்வில் மட்டும் கவனம் செலுத்தென
நீ சொன்ன வார்த்தையால்
என் வாழ்க்கைக்கு
விடுமுறையளிக்க முடியவில்லையேனோ ...


நன்றி,
நாணல்

6 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//வருடக்கணக்கில் உன்னை நேசித்து
இன்றோடு உன்னை மறக்கிறேன்
என சபதமிட்டு
ஒரே நாளில் அது
கரைந்துபோவதேனோ...//

மறக்க முடியாத ஒன்று

காதல்

கவிதை நல்லாயிருக்குங்க

sakthi said...

நீ நேசித்த
என் கவிதைகளுக்கு
உன்படிப்பில் மட்டும் கவனம் செலுத்தென
நீ சொன்ன வார்த்தையால்
பல நாள் விடுமுறையளித்தேன் ...

அதான் இத்தனை நாட்களாய் பதிவு ஒன்றும் இடவில்லையா...

அழகான வரிகள்

Thamiz Priyan said...

வாவ்!அழகா இருக்கு!

ஆயில்யன் said...

கவிதை நல்லா இருக்கு :)

ஆபிரகாம் said...

காதல்- என்றும் வசீகரமான வலி! கவிதை அழகு!

சென்ஷி said...

கவிதை?!