Saturday 27 June 2009

என்னை விட்டு பிரியாதே - யூத்ஃபுல் விகடனில்

இந்த கவிதை யூத்ஃபுல் விகடனில் வெளியிடப்பட்டுள்ளது ...

நன்றி யூத்ஃபுல் விகடன்..

http://youthful.vikatan.com/youth/nanalpoem27062009.asp

என்னை விட்டு பிரியாதே

வானவில் தோன்றவில்லை
மின்னல்கள் ஒளிரவில்லை
மழைச்சாரலும் அடிக்கவில்லை
புகையினூடே நீ வெளிவரவில்லை

இயல்பானதொரு நன்னாளில்
என்னுள் நீ நுழைந்திருக்க வேண்டும்...
நீ வந்த சுவடு தெரியாது
புது பொம்மை கிடைத்த
குழந்தையைப் போல் குதூகலித்திருந்தேன்...

தனியாளாய் உணர்ந்தேன்
எனக்காக நீயிருக்கிறாய்
என உணரும்வரை...
என் வெற்றியும் என் தோல்வியும்
உந்தன் கையில்தானடி...

பாசத்திற்கு பதில்
பணமென பழகிய நான்
பாசத்திற்கு அர்த்தம் கண்டு
உன் அன்பால்
உனக்கு அடிமையானேன்...

உன் வருகை
என் வாழ்வில் தந்த
திருப்புமுனையை திருத்திக்கொள்ள
தைரியமில்லையடி எனக்கு...
என் வாழ்விலிருந்து
உனை நீக்கும்
உரிமையுமில்லையடி எனக்கு...

நன்றி,

நாணல்




13 comments:

Thamiz Priyan said...

யூத்புல் விகடனுக்கு வாழ்த்துக்கள்!

Thamiz Priyan said...

அப்படியே நாணலுக்கும் வாழ்த்துக்கள்! ஓ.. இதுதான் கவிதையா? புரியுது.. அழகாகவும் இருக்கு.

மயாதி said...

congrats

ப்ரியமுடன் வசந்த் said...

நாணல்

வாழ்த்துக்கள்

Nathanjagk said...

//உன் வருகை
என் வாழ்வில் தந்த
திருப்புமுனையை திருத்திக்கொள்ள
தைரியமில்லையடி எனக்கு...
என் வாழ்விலிருந்து
உனை நீக்கும்
உரிமையுமில்லையடி எனக்கு//
நெறைய கல்யாணமான ஆம்பிளைங்க இதே ஃபீலிங்கல ரொம்ப புலம்பறாங்க! பாவம் எஸ்கேப் ஆக முடியலயாம்!!

நட்புடன் ஜமால் said...

விகடனுக்கு வாழ்த்துகள்!

S.A. நவாஸுதீன் said...

வாழ்த்துக்கள் நாணல்

Unknown said...

kavithai nalla ireku naanal...

கலையரசன் said...

பதிவுலகம் சார்பில் யூத்புல் விகடனுக்கு
நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் நண்பரே!!

நாணல் said...

வாழ்த்திய அனைத்து நன்பர்களுக்கும் நன்றி...

sakthi said...

அருமையான கவிதை

விகடனுக்கு வாழ்த்துக்கள்...

யாழினி said...

வாழ்த்துக்கள் நாணல்!

கவிதை அழகு...